BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 28 February 2014

சென்னையில், கையெழுத்து வளர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய டென்டுல்கர்


நேற்று முன் தினம், சென்னையில் ரெனால்ட்ஸ் நிறுவனத்தின் ‘ரைட்விஸ்’என்ற கையெழுத்து வளர்க்கும் திட்டத்தை சச்சின் டென்டுல்கர்  தொடங்கி வைத்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:

நான் சிறு வயதில் வெளியூரில் தங்கியிருந்த காலங்களில் எனது பெற்றோருக்கு கடிதம் எழுதுவேன். எனது மனைவி அஞ்சலிக்கும் கடிதங்களை எழுதியிருக்கிறேன். அது மிகவும் சுவாரசியமான அனுபவம். எழுதுவதும் கிரிக்கெட் விளையாடுவதும் ஒரே மாதிரிதான். இரண்டுக்கும் முறையான பயிற்சி தேவை, சரியான நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இரண்டிலும் போதிய பயிற்சி இருந்தால்தான் தன்னம்பிக்கையுடன் செயலில் இறங்க முடியும். கணினி பயன்படுத்துவதை விட எழுதும் போது நிறைய தகவல்கள் ஆழ் மனதில் பதியும் என்றார்.

மேலும் அவர் பேசிய போது, தனது மனைவியின் கையெழுத்து மிகவும் அழகானது, பார்ப்போர் அனைவரும் அவரது கையெழுத்தை ரசிப்பர் என்று கூறினார். கிரிக்கெட் விளையாடும் போது, பந்தை அடிக்கும் திறன் தனக்கு இயற்கையாகவே வந்துவிட்டது என்றும், ஆனால் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது, தகவல் தொழில்நுட்பம் இந்தளவுக்கு வளராத காலத்தில், மனைவிக்கு தன் கையால், கடிதங்கள் எழுதுவது என்பது தான் என்று அவர் கூறினார். கிரிக்கெட் ஆட்டக்காரர்களில், அணில் கும்ப்ளேவிற்கு, கையெழுத்து அழகாக இருக்கும் என்று அவர் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media