பிரதமர் மன்மோகன் சிங், தற்போது டெல்லியின் ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள பிரதமருக்கான அதிகாரபூர்வ இல்லத்தில் வசித்து வருகிறார். வரும் நாடாளுமன்ற தோ்தலுக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ள பிரதமர் மன்மோகன் சிங், தற்போது குடியிருக்கும் பிரதமர் இல்லத்தை காலி செய்துவிட்டு, மோதிலால் நேரு பிளேஸ் பங்களாவுக்கு குடியேற தயாராகி வருகிறார்.
இந்த பங்களாவில் தான் டெல்லியின் முன்னாள் முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் வசித்து வந்தார். இந்த பங்களாவை, மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நான்கு படுக்கைகள் கொண்ட இந்த மிகப்பெரிய பங்களாவில், மன்மோகன் சிங் குடியேற உள்ளதால், பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.