லோக்சபா தேர்தலுக்கான தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டன.. இனிமேல் எந்த ஒரு கட்சிக்கும் அழைப்பு கிடையாது என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நேற்று பல்வேறு கட்சிகளில் இருந்து 4 ஆயிரத்து 806 பேர் விலகி, தி.மு.க.வில் இணையும் விழா நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு மற்றவர்கள் தி.மு.க மீது கொண்டிருந்த கண்ணோட்டம் மாறிவிட்டது. தி.மு.க.வின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்திருப்பதை திருச்சி மாநாடு உறுதி செய்துள்ளது. தி.மு.க. தற்போது 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணலை நடத்தி முடித்துள்ளது. நேர்காணலின் போது கலந்துகொண்ட தி.மு.க.வினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக தெரிவித்த கருத்து, தி.மு.க. கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும். அதற்கு தி.மு.க தற்போது அமைத்துள்ள கூட்டணியே போதுமானதாகும் என்பதுதான். எனவே தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டது. இனிமேல் எந்த கட்சிக்கும் அழைப்பு கிடையாது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.