BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 21 March 2014

மோடி அலை தான் நாடெங்கும் வீசுதேன்னு சொல்றீங்களே, அப்புறம் எதுக்கு 2 தொகுதிகளில் மோடி போட்டி?


நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில்  வாரணாசி, வதோதரா ஆகிய இரு தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.  அவரது இந்த முடிவினை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேலியாக விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக பேசப்படுவதை மறுத்துள்ள அவர் கூறியதாவது:

மோடிக்கு ஆதரவான அரசியல் அலை வீசுவதாக கூறப்படுவது தவறான கருத்தாகும். நாட்டில் ஒரேயொரு முறை தான் அரசியல் அலை வீசியது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது வீசிய அந்த அலையின் மூலம் காங்கிரஸ் கட்சி அபாரமான வெற்றியை பெற்றது. தங்களுக்கு ஆதரவான அலை வீசுவதாக 2004 பாராளுமன்ற தேர்தலின் போது கூறிய தேசிய ஜனநாயக கூட்டணி ‘இந்தியா மிளிர்கிறது’ என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் சரியான அடியை வாங்கியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தோல்வியை மையமாக காட்டி, அந்த ஆட்சிக்கு எதிரான அலை தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று 2009 பாராளுமன்ற தேர்தலை சந்தித்த தேசிய ஜனநாயக கூட்டணி அந்த தேர்தலிலும் தோல்வியையே தழுவியது. அதேபோல் தான், மோடிக்கு ஆதரவான அலை வீசி வருவதாக தற்போது கூறப்படுகிறது. ஆதரவு அலை வீசுகையில் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளரான நரேந்திர மோடி 2 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்? என்னைப் பொருத்தவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவான அலையே தற்போதும் வீசிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு உமர் அப்துல்லா கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media