இன்று விருதுநகர் தொகுதியில் ஜெயலலிதா அத்தொகுதியின் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், “கடந்த தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தியை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் 2500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 3300 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக வறட்சிக்கு நிவாரணம் வழங்கியது தமிழகம் தான்.
நடப்பு ஆண்டில் தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி அதிகரித்து வருகிறது. விருதுநகர் பட்டாசு தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியிருந்தார்.
இது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.