பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ஜ.க. கூட்டணி சார்பில் மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் அகோரத்தை அறிமுகம் செய்து வைத்து சீர்காழியில் பேசியதாவது:
தமிழகத்தை 47 ஆண்டுகாலம் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறிமாறி ஆட்சிசெய்து தமிழக மக்களை குடிகார மக்களாக மாற்றியதுதான் இவர்களின் சாதனை. தமிழகத்தில் கடந்த கால தி.மு.க. ஆட்சிகாலத்தில் 6 மணிநேரம் மின்வெட்டு நிலவியது. தற்போது அதிமுக ஆட்சியில் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் 18 மணிநேரம் மின்வெட்டு நிலவி வருகிறது. காலப்போக்கில் தமிழகம் இருண்ட பூமியாக மாறும் நிலை உள்ளது.
வாக்காளர்கள் ஓட்டுக்காக பணம் வாங்கக்கூடாது. அது உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிவிடும். தமிழகத்தில் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். இதை சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் பா.ம.க.தான் பாடுபட்டு வருகிறது. இதை யாரும் மறுக்கமுடியாது.
தமிழகத்தில் காதலுக்கு பா.ம.க. எதிராக இல்லை. ஆனால் காதல் நாடகத்தை தான் எதிர்க்கின்றோம். ஒரு சில கட்சியினர் வேண்டுமென்றே ஜாதி கலவரத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் 134 பா.ம.க. வினரை குண்டர் சட்டத்திலும் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் அகோரத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேணடும். அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.