1996 முதல் கடந்த 17 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்து வரும் தி.மு.க. தனது அனைத்து தேர்தல் அறிக்கைகளிலும் நதிநீர் இணைப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 2014-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை நிறைவேற்ற ஒரு துரும்பையாவது கருணாநிதி கிள்ளிப் போட்டாரா என்றால் இல்லை; நிச்சயமாக இல்லை. இந்த நதிநீர் இணைப்பில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிற்கு உடன்பாடில்லை. ராகுல் காந்தி இந்தத் திட்டத்திற்கு தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்தத் திட்டம் குறித்து 2009-ஆம் ஆண்டு கருத்து தெரிவித்த ராகுல் காந்தி நதிகள் இணைப்பு என்பது ஆபத்தானது என்றும், கடினமான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இது ஒரு நாசகரமான எண்ணம் என்றும் கூறியிருந்தார். இந்தக் கருத்திற்கு தி.மு.க. ஏதேனும் எதிர்ப்பு தெரிவித்ததா?
இந்தக் கருத்தினை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை தி.மு.க. வற்புறுத்தியதா? இந்தக் கருத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று தி.மு.க. கூறியதா? மத்திய அரசை கண்டித்து ஒரு அறிக்கையாவது தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டதா? குறைந்தபட்சம் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு கடிதமாவது எழுதப்பட்டதா? இவற்றில் எதையுமே தி.மு.க. செய்யவில்லையே.
17 ஆண்டுகளாக எதையுமே செய்யாத தி.மு.க., நதிநீர் இணைப்புக்கு எதிரான கருத்திற்கு எதிர் கருத்து தெரிவிக்கக் கூட திராணியில்லாத தி.மு.க., நதிகள் தேசியமயம் மற்றும் இணைப்பிற்கு பாடுபடும் என்று கூறுவதை யாரும் நம்பத் தயாராக இல்லை. கருணாநிதியின் நினைப்பெல்லாம் குடும்ப இணைப்பில் தானே தவிர, நதிநீர் இணைப்பில் அல்ல என்பதை உலகமே அறியும்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் அரசு என்ன செய்தது? இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் ஆகியவற்றை அளித்தது. அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது. இதற்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க-விற்கும் இந்தத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும்."
இவ்வாறு ஜெயலலிதா பேசியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.