சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான ஞாநி, ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலப் பிரிவு இன்று அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை, சென்னை - பெருங்குடியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலப் பிரச்சாரக் குழு தலைவர் டேவிட் பருண்குமார் வெளியிட்டார். அப்போது, பத்திரிகையாளர் ஞாநி உடன் இருந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 24-ல் இடைத்தேர்தல் நடக்கிறது.
கடந்த முறை ஆலந்தூரில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.