2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., பண மோசடி பிரிவின் கீழ் அமலாக்கப்பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், தயாளு அம்மாளுக்கு அமலாக்கப்பிரிவு புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
மார்ச் 28-ம் தேதி தயாளு அம்மாள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். ஒருவேளை அவர் ஆஜராக முடியாவிட்டால், அங்கீகரிக்கப்பட்ட சட்ட பிரதிநிதிகள் மூலம் விசாரணை அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.