ஜெயலலிதாவும் சசிகலாவும் 1991-1994 கால கட்டத்தில் மூன்று ஆண்டுகள் வருமானம் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என்ற வழக்கு, சென்னை பொருளாதாரக் குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் வருமான வரித் துறையால் தொடரப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீடுகள் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது குற்றம் என்று கூறி, இந்த வழக்கை நான்கு மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி தீர்ப்பை வழங்க ஜனவரியில் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் ஏப்ரல் 3-ம் தேதி ஆஜராக, சென்னை - எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.