கூகுள் நிறுவனம், அவ்வபோது தமது தளத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்களைப் பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதியிலிருந்து மார்ச் 13-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, இந்தியாவில் அதிகம் தேடப்பட்டுள்ள முதல்வர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயர் முதலிடத்தில் உள்ளது.
மோடியைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
மேலும், இந்தப் பட்டியலில் சிவராஜ் சிங் சவுகான் (மத்தியப் பிரதேசம்), வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்), தருண் கோகாய் (அஸ்ஸாம்), உமர் அப்துல்லா (ஜம்மு-காஷ்மீர்) மற்றும் உம்மன் சாண்டி (கேரளா) இருப்பதாக கூகுள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுப் பற்றி கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
"நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நாட்டின் பல்வேறு மாநில முதல்வர்களைப் பற்றி அலசப்படுகிறது. அவர்களால் அவர்களது கட்சிக்கு எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்பதும் கணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூகுள் தேடல் நிலவரத்தில் இந்த முதல்வர்களின் நிலை இணையத்தில் எப்படி உள்ளது என்பதைப் பார்க்கவே இந்த கணக்கு எடுக்கப்பட்டுள்ளது."
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.