திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரியுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று கட்சியனருக்கு திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதை மீறி அழகிரியுடன் தொடர்பில் இருந்தால், கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, மதுரையில் தனது இல்லத்தின் முன்பு குவிந்திருந்த செய்தியாளர்களிடம் அழகிரி கூறியது:
"என்னுடைய ஆதரவாளர்கள் பனங்காட்டு நரி. எதற்கும் அஞ்சமாட்டார்கள். இந்தப் பூச்சாண்டி காட்டும் வேலைக்கெல்லாம் பயப்பட மாட்டார்கள். கட்சிப் பதவிக்கும், காசு, பணத்துக்கும் ஆசைப்பட்டவர்கள்தான் அங்கே இருக்கின்றனர்" என்று அதிரடியாக கூறினார் அழகிரி.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.