சென்னையில் நேற்று முன்தினம் 3 இடங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்ற கலவரத்தை தடுக்க ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் இணை ஆணையர் ஸ்ரீதர் (வடசென்னை) திருஞானம் (தென்சென்னை) சங்கர் (கிழக்கு சென்னை) சண்முகவேல் (மேற்கு சென்னை) ஆகியோர் தலைமையில் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் பகுதியில் காலை 9 மணியில் இருந்து இரவு வரை மாணவர்கள் செல்லும் பஸ்களை கண்காணிப்பார்கள். குறிப்பாக கிழக்கு சென்னையில் 15 பறக்கும் படையும், மேற்கு சென்னையில் 10 பறக்கும் படையும், வடசென்னையில் 10 பறக்கும் படையும், தென்சென்னையில் 10 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பறக்கும் படையில் ஒரு இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர், 5 போலீசார் இருப்பார்கள். இவர்கள் அண்ணாசதுக்கம், எழும்பூர், பெரம்பூர், செம்பியம், ஆவடி, வண்ணாரப்பேட்டை, தங்கசாலை, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். காலை மற்றும் மாலை வேலைகளில், பஸ்களில் போலீசார் ஏறி கல்லூரி மாணவர்களின் செயல்களை கண்காணிப்பார்கள்.
சென்னையில் மாணவர்கள் அராஜகம் அதிகமாக தான் இருக்கிறது, போலீஸாரின் இந்த நடவடிக்கை தேவையான ஒன்றே என நினைப்போர் லைக் போடுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.