BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 7 March 2014

இந்திரா காந்தி காலத்தில் தனித்து போட்டியிட்ட திமுகவின் தற்போதைய நிலை? உதிரி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்து கொண்டிருக்கிறது

பூண்டியில் ஒரு விழாவில் கலந்து கொண்ட மு.க.அழகிரி, அன்னை இந்திரா காந்தி காலத்தில் தனித்து நின்று எதிர்த்து போராடிய தி.மு.க. தற்போது உதிரி கட்சிகளுடன் கூட்டணிக்காக பேச்சு நடத்தும் நிலைக்கு வந்துள்ளது என்று கூறினார்.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்பதை தன் ஆதரவாளர்களுக்கு தெரிவித்து கொள்வதாக கூறிய அழகிரி, "தி.மு.க. தலைவருக்கு தெரியாமல் கட்சியில் சில நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து வரும் தொண்டர்களை விட்டு விட்டு, மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தி.மு.க. முக்கியத்துவம் அளிக்கிறது. " என்றும் தெரிவித்தார்.

பூண்டியில் அழகிரி கலந்து கொண்ட விழாவில், ஆயிர கணக்கான ஆதரவாளர்களிடம் இருந்து பலத்த, உற்சாக‌ வரவேற்பு அவருக்கு கிடைத்தது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media