BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 7 March 2014

நீதிமன்ற வளாகத்தில் சிறுமி கடத்தல்


மகாராஷ்டிர மாநிலம் தானே நீதிமன்றத்திற்கு சாந்தா மச்சிந்திர ஷிண்டே(40) என்பவர், தனது சகோதரர் பாலு பவார் சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, மாவட்ட நீதிமன்றத்திற்கு நேற்று வந்திருந்தார். அவர் தன்னுடன் தனது 11 வயது மகள் ரீபாவையும் அழைத்து வந்திருந்தார்.

விசாரணை தொடங்குவதற்கு முன்பாக, நீதிமன்றத்திற்கு வெளியில் சாந்தா தன் மகளை நிற்க வைத்து விட்டு தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மகளைக் காணவில்லை. நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால்,
தன் மகளை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media