BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 7 March 2014

காங்கிரஸ் ஆட்சியே பெண்களுக்கு அதிகமான பாதுகாப்பை அளித்தது, பெண் குலத்திற்கு பொற்காலம்- ஞானதேசிகன்


சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, பெண் குலத்திற்கே பொற்காலம் என்று சொல்ல கூடிய அளவில், பெண்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு பல திட்டங்களையும், சட்டங்களையும் வழிவகுத்துள்ளது என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்.

மகளிர் தினத்தை ஒட்டி வெளியிட்ட செய்தியில், அவர் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு குற்றவியல் சட்டங்களை திருத்தி பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரித்தும், பணியாற்றும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியது. 

இந்திய வாரிசுரிமை சட்டத்தை திருத்தி, சொத்தில் பெண்களுக்கு சம பங்கு, இல்லங்களில் நடக்கின்ற வன்கொடுமை தடுப்புச் சட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, பிறந்த குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை, பெண்களுக்கு பேறு காலத்தில் சத்துணவு, ராணுவத்தில் பெண்களுக்கு இடம் இவையெல்லாம் வரலாற்றில் பெண் குலத்திற்கு பொற்காலம் என்று சொல்லத்தக்க வகையில் பெண்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு என பல திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டுவந்தது மத்திய அரசு.

இவ்வாறு கூறிய ஞான தேசிகன் , அனைத்து மகளிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார். 
 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media