BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 2 March 2014

8 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்து கொன்ற ஆசாமி கைது

ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த  8 வயது சிறுவனை காணவில்லை என அவனது தாயார் கடந்த மாதம் 12-ம் தேதி போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில் கடந்த 22-ம் தேதி அதே கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தின் புதர்களுக்கிடையில் அந்த சிறுவன் பிணமாக கிடந்தான். இந்த மர்ம மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார், அதே கிராமத்தில் புதிதாக கட்டப்படும் ஒரு வீட்டில் செண்ட்ரிங் வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ரமன் பட்டேல் என்பவனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்பொழுது, தான் அந்த சிறுவனை தோட்டத்துக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் துணியால் அவனது கழுத்தை நெறித்து கொன்றதாக அவன் ஒப்பு கொண்டு இருக்கின்றான். இதன் பேரில், ரமன் பட்டேல் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media