தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஒரு இடத்தில், தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று காலை ஒரு பெண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதை பார்த்ததும், அப்பகுதி பொதுமக்கள் ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இறந்து கிடந்த பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் இறந்து 10 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவரது முகத்தை கூட அடையாளம் காணமுடியவில்லை.
உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அரசு மருத்துவமனையை சேர்த்த மருத்துவர்கள், அதே இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தும் பணியை மேற்கொண்டனர். இந்த பகுதியில் காணாமல்போன பெண்கள் குறித்தும் போலீசார் விபரம் சேகரித்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.