BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 2 March 2014

அதிகரித்தது காய்கறி விளைச்சல், வீழ்ச்சியடைந்தது விலைகள்


பிற மாநிலங்களில் இருந்து கோயம்பேட்டில் உள்ள அங்காடிக்கு வ‌ரும் காய்கறிகளின் வரத்து கடந்த நான்கு மாதங்களாக அதிகரித்து வருகின்ற காரணத்தால், காய்கறிகளின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது.

இதுப்பற்றி, கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகள் சங்கங்களின் ஆலோசகர் சௌந்திரராஜன் கூறுயதாவது:

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சில்லறை விலையில், கிலோ ரூ.100- க்கு விற்ற வெங்காயம் தற்போது ரூ.15-க்கும், ரூ. 25- க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.12- க்கும், ரூ.40-க்கு விற்ற தக்காளி ரூ.7- க்கும் கோயம்பேடு சந்தையில் சில்லறை விலையில் விற்கப்படுகின்றன.

அதே போல் ஒரு மாதத்துக்கு முன் ரூ.15 க்கு விற்ற ஒரு முருங்கைகாய், தற்போது ரூ.2 க்கு விற்கப்படுகிறது. முட்டைக்கோஸ் கிலோ 10 ரூபாய்க்கும், உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய், புடலங்காய், கேரட்ஆகியவை கிலோ 20 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன என்று கூறினார்.

மேலும், சராசரியாக 220 முதல் 240 காய்கறி லோடுகள் வரை கோயம்பேடு சந்தைக்கு வருவது வழக்கம். ஆனால், தற்போது 300 முதல், 350 லாரிகள் வந்துக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media