கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் ஒரு விசைப்படகில் இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, வலைகளை அறுத்து எறிந்து, படகுகளை சேதப்படுத்தியும் சென்றனர். இது குறித்து விசைப்படகின் உரிமையாளர் சகாயராஜ் கடந்த பிப்ரவரி 2 அன்று ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதுபோல கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பாம்பன் நாட்டுப்படகு மீனவர் ஜான் பிரிட்டோ பாக் ஜலசந்தி கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை நெடுந்தீவு மீனவர்கள் இருபதிற்கும் மேற்பட்டோர் ஜான் பிரிட்டோவின் வலைகளை அபகரித்துச் சென்றனர். இதுகுறித்து ஜான் பிரிட்டோ பாம்பன் காவல் நிலையத்தில் பிப்ரவரி 4 ஆம் தேதி புகார் அளித்தார்.
இந்நிலையில், 27 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் கோவில் காவல்துறையினர் இலங்கை கடற்படையினர் மீதும், 24 தினங்கள் கழித்து பாம்பன் காவல்துறையினர் இலங்கை மீனவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.