நெய்வேலி என்.எல்.சி. வளாகத்தில் இன்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் சுட்டதில் ஒப்பந்த ஊழியர் ராஜா பலியானார். இதனைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து துப்பாக்கியால் சுட்ட வீரரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தொழிலாளர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து என்.எல்.சி.யில் 24 மணி நேரம் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் நாளை இரவு 10 மணி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.