தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரண்குமார் ரெட்டி, தனது ஆந்திர முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தனிக் கட்சி தொடங்கினார். தனது கட்சிக்கு ’’ஜெய் சமக்யாந்திரா கட்சி’’ என பெயரிட்டு உள்ளார். மேலும், தனது கட்சிக்கு ‘செருப்பு’ சின்னத்தை தேர்ந்து எடுத்தார். இதற்கு தேர்தல் ஆணையம் நேற்று ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் தனது கட்சி சின்னத்தை கிரண்குமார் ரெட்டி அறிமுகப்படுத்தி பிரச்சாரத்தை தொடங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:
மக்கள் அனைவரும் செருப்பு அணிகிறார்கள். அதனால் இந்த சின்னம் எளிதில் அவர்களிடம் பிரபலமடையும் செருப்பு அதனை அணிபவர்களின் சுமையை தாங்குவது மட்டுமின்றி அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கிறது. சாதி, மதம் போன்ற எந்த பாகு பாட்டையும் காட்டுவதில்லை. சமத்துவத்தின் சின்னமாக செருப்பு இருக்கிறது.
ராமராஜ்யம் ஏற்பட ராமரின் செருப்பு வழி காட்டியது அது போல இந்த செருப்பும் நல்ல ஆட்சிக்கு, மக்கள் ஒற்றுமைக்கு வழி காட்டும்.
இவ்வாறு கிரண்குமார் ரெட்டி பேசினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.