டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, "அதை செய்வோம்; இதை செய்வோம் என்று கூறி டெல்லி மக்களிடம் ஓட்டு வாங்கி விட்டு ஆட்சி அமைக்க முடியாமல் திணறிய ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் தான் ஆதரவு அளித்து ஆட்சி அமைக்க உதவியது. டெல்லி மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் எந்த பிரச்சனையையும் அவர்கள் தீர்க்கவில்லை. பெரிய வாக்குறுதிகளை தருவதும் ஒரு அரசை வழி நடத்துவதும் வெவ்வேறு என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு ஆட்சியை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்", என்று கூறினார்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை பிரிக்கும் ஒரு காரணியாக ஆம் ஆத்மி கட்சியை பார்க்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ராகுல், ‘தேசிய அளவில் நான் அப்படி கருதவில்லை’ என்று தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.