செஞ்சி மந்தவெளியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், "பாமக 2016ல் ஆட்சி அமைத்தால், தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றுவோம்." என்று கூறினார். மேலும் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வியை இலவசமாக கொடுப்போம். ஜெயலலிதா ஆட்சியில் கல்வியை தனியார்க்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு, டாஸ்மாக் கடைகளை அரசே எடுத்து நடத்துகின்றது. மேலும் ஒரு கோடி இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். நாங்கள் ஆட்சி அமைத்தால் 2 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு டிராக்டர் கொடுத்து விவசாயத்தை காப்போம்.
இந்தியாவில் 17 சதவீதம் மின்பற்றாக்குறை இருந்து வருகின்றது. 2016–ல் பாமக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் சாராயகடைகளை மூடிவிட்டு தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றுவோம்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.