BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 17 March 2014

கற்பழிக்க முயன்ற போது, கூச்சலிட்ட பெண்ணை ஓடும் பேருந்தில் இருந்து தள்ளி விட்ட ஓட்டுநர் கைது


பெங்களூர் நகரின் பனஷங்கரி பகுதிக்கு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 13-ம் தேதி இரவு அரசு பேருந்தில் சென்றார். கடைசி நிறுத்தமான பனஷங்கரியில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், அந்த பெண் பேருந்து ஓட்டுநரிடம் தேவேகவுடா பெட்ரோல் பங்குக்கு செல்ல  வழி விசாரித்தார்.

’பேருந்து அந்த பக்கமாகதான் போகிறது. உங்களை அங்கே இறக்கி விடுகிறேன்’ என்று கூறிய ஓட்டுநர் சற்று தூரம் சென்றதும் பேருந்தை நிறுத்திவிட்டு அந்த பெண்ணை கற்பழிக்க முயற்சித்தார். அப்பொழுது, அந்த‌ பெண் கூச்சலிடவே, மீண்டும் பேருந்தை கிளப்பி ஓட்டி சென்று, அப்பெண்ணின் கைப்பையை பறித்துக் கொண்டு, பேருந்தில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டு வேகமாக சென்று விட்டார். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அந்த பெண், நடந்த சம்பவம் தொடர்பாக சாம்ராஜ்பேட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, பேருந்து ஓட்டுநர் சித்தார்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்ட கர்நாடக மாநில போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, காயமடைந்த பெண்ணின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்காத மூன்று போலீசாரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media