நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, நெய்வேலி சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் கூறும்போது, 'என்.எல்.சி.யின் முதல் சுரங்கத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளரான டி.சுரேஷ் என்பவர் தனது சக பணியாளர்களுடன் இன்று மதியம் 1 மணி அளவில், இரண்டாவது நுழைவாயில் செல்ல முயன்றிருக்கிறார். இரண்டாவது சுரங்கத்துக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலர் ராம்சிங் அவர்களைத் தடுத்திருக்கிறார். இதனால், தொழிலாளர்களுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. நிலைமை மிகவும் மோசமடைந்தச் சூழலில், காவலர் ராம்சிங் தனது துப்பாக்கியால் மூன்று ரவுண்டு சுட்டுள்ளார். இதில், தலையில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மற்றவர்கள் அங்கிருந்து காயமின்றி தப்பிவிட்டனர்' என்று சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் தெரிவித்தார்.
இச்சம்பவத்தால், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பதற்றம் நீடிக்கிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.