காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அவர் மோடியைப் பற்றி பேசியது பின்வருமாறு:
மோடியிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். அவருடைய மனதில் சிறிதளவாவது பெண்கள் மீது மரியாதை இருந்தால், தேர்தல் விண்ணப்பத்தில் தனது மனைவியின் பெயரை குறிப்பிட வேண்டிய பகுதியை ஏன் நிரப்பாமல் விட்டார்?
மோடி தனக்கு திருமணமாகிவிட்டதாக ஏன் அதில் கூறவில்லை? அவர் திருமணம் செய்து கொள்ளவில்லையா? அல்லது தனது மனைவியை கை விட்டுவி்ட்டாரா? வறுமையில் வாடும் ஜஷோடாபென் (மோடியின் மனைவி என கூறப்படுபவர்) வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவ்வளவு பெரிய மனிதராக வந்திருக்கும் மோடி ஏன் அவரது மனைவிக்கு பங்களாவை தரவில்லை? தனது மனைவியை கவனிக்கத் தெரியாத ஒருவர் நாட்டை எப்படி கவனித்துக் கொள்ள போகிறார்?
இவ்வாறு திக் விஜய் சிங்க் பேசியுள்ளார். இது குறித்து உங்களது கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.