ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியை கௌரவிக்கும் வகையில், மதிமுக பேரவையில் இன்று காலை சென்னை அண்ணாநகர் விஜயஸ்ரீ மகாலில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள வந்த ராம்ஜெத் மலானிக்கு பலத்த, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் ராம்ஜெத் மலானியை பாராட்டி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதில் ராம்ஜெத் மலானிக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று அவர் கடுமையாக பாடுபட்டு வருகிறார்.
3 பேரின் உயிரைக் காப்பாற்ற அவர் பணம் வாங்காமல் வாதாடியுள்ளார். அவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவருக்கு தமிழ்ச்சமுதாயம் மிகவும் கடமைப்பட்டுள்ளது.
ராம்ஜெத்மலானி 120–ம் ஆண்டுகள் நோய் நொடியின்றி நன்றாக வாழ வேண்டும். அவரது 100–வது பிறந்தநாள் விழாவை நாம் சென்னையில் கொண்டாட வேண்டும்.
மூவர் உயிர் காக்க, பணம் வாங்காமல் பாடுபட்ட மாமனிதர் ராம்ஜெத் மலானியை சல்யூட் செய்ய நினைப்பவர்கள், லைக் செய்யுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.