மலேசியாவில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்ட போயிங் ரக விமானம், வியட்நாம் அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் சந்திரிகா சர்மா (51) பயணித்தது தெரியவந்துள்ளது. மங்கோலியாவில் நடைபெறும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அவர் மலேசியாவில் இருந்து பீஜிங் செல்லும் விமானத்தில் பயணித்துள்ளார்.
சென்னையில் கணவருடனும், கல்லூரிக்கும் செல்லும் தன் மகளுடனும் வசித்து வந்தார், சந்திரிகா சர்மா. விமான விபத்து குறித்து அதிகாரப் பூர்வ அறிவிப்பு வந்ததும், அவரது குடும்பத்தினர் கடும் சோகத்தில் மூழ்கினர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.