BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 8 March 2014

பெண்ணின் பெயரில் போலியாக முகநூல் கணக்குகள் தொடங்கி, ஆபாச படங்களை வெளியிட்ட வாலிபர் கைது


ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முஹம்மது காலித், ஒரு ஓட்டலில் பணியாற்றிய போது, அங்கு வேலை செய்த இளம்பெண் மீது காதல் வயப்பட்டார். அவரது காதலை அந்த பெண் நிராகரித்ததால் அவரது இமெயில் ஐ.டி.யை அறிந்திருந்த முஹம்மது காலித், அதை வைத்து அந்த பெண்ணின் பெயரில் போலியாக ஃபேஸ்புக்கில் கணக்கை ஆரம்பித்து, அந்த பெண்ணின் புகைப்படத்துடன் ஆபாச செய்திகளையும், படங்களையும் பதிவேற்றம் செய்து, அவரது நணபர்கள் பார்க்கும்படி செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.  போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரில் 7 போலி ஃபேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்து,  முஹம்மது காலித் ஆபாச வேலைகளில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media