BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 22 March 2014

தேர்தலில் சீட் வாங்கி தர லஞ்சம் கேட்ட‌ ஆம் ஆத்மி உறுப்பினர்களை கேஜ்ரிவால் நீக்கினார்

ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட சீட் வாங்கி தருவதற்கு சில நிர்வாகிகள் பணம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் விசாரணை நடத்திய கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், அதிரடியாக நடவடிக்கை எடுத்து இரண்டு உறுப்பினர்களையும் நீக்கினார்.

இதுபற்றி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “அருணா சிங் மற்றும் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வாங்கி தருவதாக கூறி சிலரிடம் பணம் கேட்டுள்ளனர். இது தொடர்பான பணபரிமாற்றம் நடக்கவில்லை. ஆனால், பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மேலும் எந்த வேட்பாளர் மீதாவது நம்பகமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால் அவர்களின் டிக்கெட்டுகள் உடனடியாக ரத்து செய்யப்படும்” என்றார்.

உத்தர பிரதேச மாநிலம் மிஸ்ரிக் தொகுதியில் போட்டியிட ராஜேஷ் என்பவர் விருப்பம் தெரிவித்திருந்தார். அவரிடம் பணம் கேட்டுள்ளனர். அவரது புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media