ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:
இன்றைக்கு நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியாகும். இது மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இந்த கூட்டணி தான் ஜெயிக்கும். தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.
40 தொகுதியிலும் ம.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்ற எண்ணத்தோடு நாங்கள் செயல்படுவோம்.
தமிழர்களுக்கு நன்மை செய்யும் கூட்டணியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க– தி.மு.க. பரிமாணம் தகர்ந்து விட்டது. நாடெங்கும் நரேந்திர மோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவர் பிரதமராக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆர்வமுடன் ஓட்டளிப்பார்கள். இந்தியாவில் இனிமேல் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக் கூடாது. காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது.
இலங்கை இனப்படுகொலை, மீனவர்கள் கைதுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் காரணம். எனவே சில கட்சிகளை சேர்த்து காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் நிலையும் வந்து விடக் கூடாது. காங்கிரசால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் நரேந்திரமோடி தான் பிரதமர் என்றும் கூறுகிறோம். எனவே எங்கள் கூட்டணிக்குதான் தமிழக மக்கள் ஆதரவு தருவார்கள்.
இவ்வாறு வைகோ கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.