நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகின்ற நிலையில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இதையொட்டி, பொது இடங்களில் உள்ள கட்சி சின்னங்கள், சுவர் விளம்பரங்கள், அரசு துறை நிறுவனங்களில் இருக்கும் முதல்-அமைச்சரின் படங்கள், கட்சி தலைவர்களின் படங்கள் மற்றும் தேர்தல் விளம்பரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உதயசூரியன் வடிவிலான கருணாநிதி பொன்விழா வளைவு மட்டும் திறந்த நிலையில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, விருகம்பாக்கம் பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஜி.முரளி நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்று அளித்தார்.
புகார் மனுவில், சென்னை சைதாப்பேட்டை, அண்ணாசாலை பகுதியில் உள்ள உதயசூரியன் வடிவிலான கலைஞர் பொன்விழா வளைவு இன்னமும் மறைக்கப்படாமல் உள்ளது, தேர்தல் நடத்தை விதிமுறைப்படி உடனடியாக அதனை மறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரை அடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் , சைதாப்பேட்டையில் உள்ள உதயசூரியன் வடிவிலான அந்த பொன்விழா வளைவை நேற்று துணியால் மறைத்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.