உத்தர பிரதேச மாநிலத்தில், புரன்பூர் பகுதியில், பாஜக சார்பில் பேசிய மேனகா காந்தி, காங்கிரஸ் தலைவர் மற்றும் தனக்கு அக்காள் முறை வரும் சோனியாகாந்தியை கடுமையாக தாக்கி பேசினார். பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது:
சோனியா காந்தி இந்த நாட்டின் மருமகளாக இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்த போது எதையும் கொண்டு வரவில்லை. வெறும் கையை வீசிக் கொண்டுதான் வந்தார். அவர் மீது இந்திய மக்கள் அனைவரும் அன்பு மழை பொழிந்தனர். பாசம் காட்டினார்கள். ஆனால் சோனியா அதற்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை.
இன்று உலகப் பெண் மணிகளில் 6–வது பெரும் பணக்காரராக சோனியா உள்ளார் என்று மேற்கத்திய பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து, எப்படி வந்தது?
சோனியா திருமணம் முடிந்து வந்த போது ஒரு பைசா கூட வரதட்சணை பெற்று வரவில்லை. அப்படிப்பட்டவருக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.
நாட்டின் மின் திட்டங்கள், சாலை திட்டங்கள், கல்வித் திட்டங்களில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது. நமது எதிர்கால சிறுவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது.
சோனியாவும் அவரது காங்கிரஸ்காரர்களும் ஆங்கிலேயர்களை விட 100 மடங்குக்கு மேல் இந்த நாட்டில் ஊழல் செய்து சுரண்டியுள்ளனர்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் துப்பாக்கி குண்டுகளையும், தடியடிகளையும் நம் முன்னோர்கள் வீரத்துடன் எதிர்கொண்டனர். ஆனால் அந்த சாதனைகளை எல்லாம் முறியடிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கடந்த 10 ஆண்டுகளில் ஊழல்கள் செய்துள்ளனர்.
இவ்வாறு மேனகாகாந்தி கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.