ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குப்தா வாரணாசி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், மோடியின் பிரச்சாரத்துக்கு ரூ.1000 கோடி செலவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
வாரணாசியில் நடைபெற்ற மோடியின் பேரணியில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக பா.ஜனதா தெரிவித்துள்ளன. அதில் பாதி பேர் பா.ஜனதாவின் சின்னங்கள் அல்லது அதனை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகள், பொருட்களை அணிந்து வந்தனர். பேரணியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தொப்பிகள், புடவைகள், கொடிகள், முகமூடிகள், பேனர்கள்‘, டி.சர்ட்டுகள் ஆகியவற்றுக்கு ரூ.5 கோடியே 75 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
மோடி வந்த ஹெலிகாப்டருக்கு ரூ.70 லட்சம் வாடகை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைக்கு எதிராக பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு புடவை, டி.சர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123 (1)–ன்படி எதிரானதாகும்.
இதேபோல் வாரணாசி தொகுதி முழுவதும் பேனர்கள் வைக்க பெருந்தொகையை செலவிட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.