BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 27 April 2014

லோக் ஆயுக்தா குஜராத்தில் அமைக்கப்படும் போது, மோடி ஜெயிலுக்கு போவார்- ராகுல் காந்தி

குஜராத் மாநிலத்தில், தேவ்கத் பரியா என்ற இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

இங்கே (குஜராத்) லோக் ஆயுக்தாவோ, போதுமான  அளவு தகவல் அறியும் உரிமை கமிஷனர்களோ இல்லை. 10 தகவல் அறியும் உரிமை கமிஷனர்களை நியமிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் 5 பேர் மட்டுமே உள்ளனர்.

மற்ற மாநிலங்கலில் எல்லாம் லோக் ஆயுக்தா அமைப்பு இருக்கிறது. ஆனால் ஊழல்வாதிகளை பிடிக்கும் அதிகாரம் படைத்த அந்த அமைப்பு இங்கு இல்லை. இங்கே லோக் ஆயுக்தா வரும் போது, தேவையான அளவு தகவல் அறியும் உரிமை கமிஷனர்கள் நியமிக்கப்படும் போது, உங்கள் காவல்காரன்(மோடி) ஜெயிலுக்குள் போவார்.

குஜராத் மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் கல்விக்காக போடப்படும் வருடாந்திர பட்ஜெட்டை விட 5 மடங்கு அதிகத் தொகையான சுமார் 4,500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அதானிக்கு மோடி கொடுத்துள்ளார்.

எல்லா வகையான மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், பொய்களை சொல்லி, மற்றவர்களிடம் இருந்து பறித்து, ஒருவருக்கே கொடுக்க வேண்டும் என்று மோடி நம்புகிறார்.

இது குஜராத் மாடல் அல்ல, அதானி மாடல். குஜராத் மாடலைப் பற்றிய உண்மை நிலையை நான் அம்பலப்படுத்திய பிறகு குஜராத் மாடலைப் பற்றி பெருமை பேசுவதை மோடி நிறுத்திக் கொண்டார். 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் ஒரு ரூபாய் என்ற மிட்டாயின் விலையில் அதானிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரம் மிட்டாய்களை தந்துவிட்டு ஆயிரம் ஏக்கர் நிலத்தை அதானி வாங்கிக் கொண்டார். அதே போல், நீங்களும் மிட்டாய்களை தந்து அரசிடமிருந்து நிலம் வாங்க முயன்றால் அடித்து விரட்டப்படுவீர்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media