BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 27 April 2014

நரேந்திர மோடியை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம்- லதா ரஜினிகாந்த்


நரேந்திரமோடி கடந்த 13–ந் தேதி சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது போயஸ் கார்டனில் உள்ள‌ நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடி தன்னை சந்தித்தது பற்றி ரஜினிகாந்திடம் கேட்ட போது, ‘‘மோடி எனது நெருங்கிய நன்பர் அந்த வகையில் என்னை சந்தித்தார்’’ என்று கூறினார்.

இது தொடர்பாக ரஜினிகாந்தின் மனைவி லதா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ரஜினி-மோடி சந்திப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘நரேந்திரமோடி ரஜினியின் மிக நெருங்கிய நண்பராவார். ரஜினிகாந்த் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது மோடி நேரில் வந்து பார்த்தார். இப்போது அவர் எங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து எங்களை சந்தித்தது உள்ளார். இதனால் நாங்கள் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம். அவர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை கவுரவபடுத்தி விட்டார்’’ என்று கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media