மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால், தற்போது 61 ரூபாயாக உள்ள அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டே ஆண்டுகளில் 35 ரூபாயாக மாறும் என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார்.
வாரணாசியில் ஒரு கருத்தரங்கில் பேசிய அவர், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்ப்பது ஏன்? என்ற தனது நிலைப்பாட்டுக்கு விளக்கம் அளிக்கையில், ’வால்மார்ட் நிறுவனம் தொழில் செய்ய வங்கியில் இருந்து 2 சதவீத வட்டிக்கு கடன் வாங்குகிறது. அதே வேளையில், இந்தியாவில் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுக்கு 12 முதல் 18 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தில் இவ்வளவு வேறுபாடு இருக்கையில் சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்திய வியாபாரிகள் எப்படி போட்டிப் போட்டு தொழில் செய்ய முடியும்?’ என்ற கேள்வியை எழுப்பினார்.
மோடியின் ஆட்சியை பற்றி புகழ்ச்சியாக பேசிய சுப்ரமணியன் சுவாமி, "மோடி தலைமையிலான அரசு, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மிகவும் முன்னேறிய மாநிலமாக குஜராத்தை உயர்த்தியுள்ளது. ஆண்டொன்றுக்கு 10 சதவீதம் அளவுக்கு அங்கு விவசாய வளர்ச்சி உள்ளது. " என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.