BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 27 April 2014

கோடநாடு செல்லும் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரும் அதிமுகவினர்


தேர்தல் முடிவடைந்து இன்று கோடநாடிற்கு வருகை தரவிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்க அ.தி.மு.க-வினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தேர்தல் ஆணைய விதிகள் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன. முதல்வர் கோடநாட்டுக்கு வரும்போதெல்லாம் கட்-அவுட், போஸ்டர், ஆடல்-பாடல், வெடி வெடித்து அமர்க்களப்படுத்தும் அ.தி.மு.க-வினர், தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முன்பு போல ஆரவாரமாக வரவேற்பு கொடுக்க முடியுமா என குழப்பம் அடைந்துள்ளனர்.

வரவேற்புச் செலவுகள் வேட்பாளரின் கணக்கில் வருமோ என்ற சந்தேகத்தில் உள்ளனர். முதல்வரை வரவேற்க தட்டி மற்றும் போஸ்டர் ஒட்ட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.

சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வரும் முதல்வர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதியம் சுமார் 1 மணியளவில் கோடநாடு செல்கிறார். அங்கு அவர் தேர்தல் முடிவுகள் வரை தங்கியிருப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media