குஜராத்தில் 26 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 30 ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் அங்கு அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 1, 80,000 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களில், 19 ஆயிரம் பேர் ஆபத்தானவர்கள் மற்றும் கிரிமினல் பின்னனி உடையவர்கள் என்று அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி இன்று நான்கு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும் குஜராத்தில் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தும் நோக்கிலும் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, மேலும் மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.