காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளைத் தேடும் பணியில் மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இரு ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்களும் 3 தீவிரவாதிகளும் இறந்தனர்.
இதில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரும், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் (31) ஆகியோர் உயிரிழந்தனர். இது குறித்து மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன் கூறியதாவது:
'முகுந்த் எப்போதும் வாழ்க்கையில் குறிக்கோளுடன் இருந்தவன். சின்ன வயதில் இருந்தே தாய், தந்தைக்கு மரியாதை கொடுக்கும் பிள்ளை. என் மகனுக்குத் தாம்பரத்தில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசை. சில நாள் முன்புதான் வீட்டுக்கான முதல் தவணைத் தொகையை கொடுத்துவிட்டு வந்தோம். வீடு பார்க்கும்போது, ‘அப்பா வீடு 3 படுக்கை அறைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். நீங்களும் அம்மாவும் எப்பவும் எங்ககூடத்தான் இருக்க வேண்டும்’ என்று கூறுவான். ஆனா இப்ப அவனுடைய ஆசையை நிறை வேற்ற முடியாமல் போய்விட்டது.
சமீபத்தில் நண்பர்களுடன் ஸ்கூட்டர்ல போகும்போது விபத்தில் அவனுடைய நண்பருக்கு அடிபட்டுவிட்டது. ஆனால், நாங்கள் பயந்துவிடுவோம் என்று நினைத்து அதனை எங்களிடம் கூறவில்லை. என்னையும் அவங்க அம்மாவையும் முகுந்த் குழந்தை போல் பார்த்துக் கொள்வான். நாட்டுக்காக என் மகன் உயிர்த் தியாகம் செய்து இருப்பது பெருமையாக இருக்கிறது'' என்று கூறினார்.
இதில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரும், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் (31) ஆகியோர் உயிரிழந்தனர். இது குறித்து மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன் கூறியதாவது:
'முகுந்த் எப்போதும் வாழ்க்கையில் குறிக்கோளுடன் இருந்தவன். சின்ன வயதில் இருந்தே தாய், தந்தைக்கு மரியாதை கொடுக்கும் பிள்ளை. என் மகனுக்குத் தாம்பரத்தில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசை. சில நாள் முன்புதான் வீட்டுக்கான முதல் தவணைத் தொகையை கொடுத்துவிட்டு வந்தோம். வீடு பார்க்கும்போது, ‘அப்பா வீடு 3 படுக்கை அறைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். நீங்களும் அம்மாவும் எப்பவும் எங்ககூடத்தான் இருக்க வேண்டும்’ என்று கூறுவான். ஆனா இப்ப அவனுடைய ஆசையை நிறை வேற்ற முடியாமல் போய்விட்டது.
சமீபத்தில் நண்பர்களுடன் ஸ்கூட்டர்ல போகும்போது விபத்தில் அவனுடைய நண்பருக்கு அடிபட்டுவிட்டது. ஆனால், நாங்கள் பயந்துவிடுவோம் என்று நினைத்து அதனை எங்களிடம் கூறவில்லை. என்னையும் அவங்க அம்மாவையும் முகுந்த் குழந்தை போல் பார்த்துக் கொள்வான். நாட்டுக்காக என் மகன் உயிர்த் தியாகம் செய்து இருப்பது பெருமையாக இருக்கிறது'' என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.