BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 28 April 2014

குஜராத் குறித்து அரைகுறையாகத் தெரிந்துகொண்டு, ராகுல் வேலைவாய்ப்பு பற்றியும், லோக்ஆயுக்தா பற்றியும் பேசுவது சரியல்ல.- மோடி

ராகுல் கணக்குபடி குஜராத்தில் 27,000 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு இல்லையாம், ஆனால் அங்கு இருப்பதே 6கோடி பேர் தான், இது போன்ற ஆட்களை வைத்து கொண்டு எப்படி நாட்டை முன்னேற்றுவது? -மோடி

குஜராத்தின் படான் மக்களவைத் தொகுதியில் இன்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது இறுதிக் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, "உங்களுக்கு மிகவும் சோர்வாக இருந்தால், அதைப் போக்குவதற்கு ராகுல் காந்தியின் பேச்சை கேட்கலாம். அவரது கணக்குப்படி, குஜராத்தில் 27,000 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையாம். ஆனால், குஜராத்தின் மொத்த மக்கள் தொகையே 6 கோடிதானே? இந்த மாதிரியான ஆட்களை வைத்துக்கொண்டு நாட்டை எப்படி முன்னேற்றுவது? குஜராத் குறித்து அரைகுறையாகத் தெரிந்துகொண்டு, ராகுல் வேலைவாய்ப்பு பற்றியும், லோக்ஆயுக்தா பற்றியும் பேசுவது சரியல்ல.

அரசியல் ஆதாயத்திற்காக நர்மதை அணை விவகாரத்தில், சோனியா அரசு குஜராத்திற்கு துரோகம் இழைத்துவிட்டது. குஜராத் மாநிலம், தண்ணீர் இன்றி தவிப்பதாக கூறுகிறார். சோனியா சவுராஷ்ட்ராவுக்கு ரயிலில் தண்ணீர் அனுப்பினார். ஆனால், தற்போது பெரிய குழாய்கள் மூலமாக மக்களுக்கு தண்ணீர் பாய்கிறது.

ரயிலில் தண்ணீர் விநியோகம் செய்யும் மோசமான யோசனையை, சோனியாவின் ஆலோசகர் (அகமது படேல் பெயரை குறிப்பிடாமல்) தான் தந்துள்ளார். அம்மா - மகனின் அரசு மற்றும் அவர்களின் ஆலோசகர் மேற்கொண்டுள்ள திட்டம் நாட்டையே சீரழித்துவிட்டது.

நர்மதையை சுற்றி வேலி அமைக்க நாங்கள் திட்டமிட்டபோது, எதற்காக அதனை தடுத்தீர்கள்? அப்படி செய்திருந்தால், எங்களுக்கு 4 மடங்கு தண்ணீர் கிடைத்திருக்கும். அப்படி நாங்கள் செய்தால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு குஜராத்தில் காங்கிரஸ் இல்லாமல் போய்விடும் என்று உங்கள் ஆலோசகர் கூறினாரா?

காங்கிரஸ் என் மீது பழி சுமத்த ஏதேனும் விவகாரம் சிக்காதா? என்று பார்த்துக்கொண்டிருக்கிறது. நான் டீ விற்றேனா? இல்லையா? என்று ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக வத்நகருக்கு (மோடியின் சொந்த ஊர்) 100 நபர் கொண்ட குழுவை, காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளது" என்றார் மோடி.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media