BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 28 April 2014

நரேந்திர மோடியிடமிருந்து எந்த சலுகையையும் பெறவில்லை- அதானி


குஜராத்தில் ஏழை விவசாயிகளுக்கு சொந்தமான 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.1 என்ற விலையில், அதாவது ஒரு மிட்டாயின் விலையில் தொழிலதிபர் அதானிக்கு நரேந்திர மோடி வழங்கியுள்ளார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேலும் பிரதிபலனை எதிர்பார்த்து மோடியின் பிரச்சார செலவை அதானி ஏற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் பி.டி.ஐ. செய்தியாளரிடம் பேசிய கௌதம் அதானி நேற்று கூறுகையில், “குஜராத்தின் கட்ச் பகுதியில் கடலோர முந்த்ரா நகருக்கு அருகில் 1993-ல் எங்கள் தொழில் நிறுவனங்களுக்காக நிலம் வாங்கினோம். இது நரேந்திர மோடி ஆட்சியில் நில வங்கிக்காக திரட்டிய 15,946 ஏக்கரில் 3-ல் 1 பகுதியாகும். எந்த விவசாயிடம் இருந்தும் ஒரு ஏக்கர் நிலத்தை கூட நாங்கள் வாங்கவில்லை. ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில், சாகுபடி செய்ய முடியாத பாலைவனம் போன்ற தரிசு நிலங்களையே நாங்கள் வாங்கினோம்” என்று கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media