தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய உருக்கமான கடிதம் கீழ்வருமாறு:
முதல்வர் ஜெயலலிதா 40 இடங்களிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தி தோழமைக் கட்சிகளுக்கு ஒரு இடம்கூட கொடுக்காமல் அத்தனை தொகுதிகளிலும் போட்டியிட்டு ஹெலிகாப்டரில் சென்று சிரமம் இல்லாமல் வாக்கு கேட்டு வருகிறார்.
நானோ இந்த 90 வயதில், பயணம் செய்ய வசதியற்ற ஒரு வேனில் தூக்கிக் தூக்கிப் போடுகின்ற நிலையில் சாலை வழியாக பல நூறு கிலோ மீட்டர்கள் பயணம் செய்து மக்களைச் சந்திக்கிறேன். வேன் ஒவ்வொரு பள்ளத்திலும் விழும்போது, முதுகு வலியால் அவஸ்தைப்படுகிறேன்.
ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் பேசிவிட்டு தங்குமிடத்துக்குச் செல்லும்போது உடம்பு முழுவதும் வலி. இரவு முழுவதும் தூக்கமில்லை. நான் எந்த அளவுக்கு சிரமப்படுகிறேன் என்பதை என்னுடன் பயணம் செய்த 2 மருத்துவர்களிடம் கேட்டால் கூறுவார்கள். என்னால் முடிந்தவரை உழைக்கிறேன். முடிவினை நல்ல விதமாக நீ எடுப்பாய் என்பதை நன்கறிவேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.