BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 20 April 2014

"மக்களை ஏமாற்றும் கலையில் திமுகவை வென்ற அதிமுக" என பேசிய குஷ்பூ!!

வேலூர் தொகுதியில் திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாக இருந்த குஷ்பூ திடீரென, உடல் நிலை சரியில்லை என்று கூறி அப்பிரச்சாரத்தில் ஈடுபடாமல், சென்னைக்கு திரும்பினார். 

நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிட குஷ்பூவிற்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தது போல் அவருக்கு கிடைக்கவில்லை. கட்சி தலைமை கேட்டு கொண்டதன் பேரில், திமுகவிற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினார் குஷ்பூ. இந்நிலையில், ஒரு பொதுக் கூட்டத்தில், அ.இ.அ.தி.மு.க கட்சி, மக்களை ஏமாற்றும் கலையில் தி.மு.க.வையே வென்று விட்டது என்று குஷ்பூ கூறியதாகவும், இதனால் அவருடன் பிரச்சாரத்தில் அங்கிருந்த திமுகவினர் கோபம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. குஷ்பூ அவ்வாறு பேசியதை அறிந்த கட்சி தலைமை அவர் மீது அதிருப்தியும், கோபமும் அடைந்ததால், அவர் வேலூர் பிரச்சாரத்தில் ஈடுபடாமல், சென்னைக்கு திரும்ப வேண்டியதாயிற்று.

# குஷ்பூ மேடம் நீங்க பேசினது தப்பு.. மக்களை ஏமாற்றும் கலையில் திமுகவை யாரும் வெல்ல முடியாதுனு பேசியிருக்கனும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media