BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 20 April 2014

எலும்புத் துண்டுக்காக ஓடுவதுபோல அலைபாய்ந்தவர் விஜயகாந்த் - சீமான் பேச்சு

நாம் தமிழர்' கட்சி தலைவர் பிரபல செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வைகோவை பற்றி...

வைகோ மாபெரும் வரலாற்றுத் தவறை செய்துவிட்டார். மதிமுக இப்போது போட்டியிடும் ஏழு தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டிருந்தால் நாங்கள் ஏன் அதிமுக-வுக்கு ஆதரவு கொடுக்கப் போகிறோம்? வைகோவுக்காக சூறாவளிப் பிரச்சாரம் செய்திருப்போமே. தனது தவறுக்கான விளைவை விரைவிலேயே உணர்வார் வைகோ.

விஜயகாந்த் பற்றி...

மோடி வந்தால் ஊழலை ஒழிப்பார் என்கிறார் விஜயகாந்த். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து எத்தனை மாதங்கள் ஆயிற்று? அப்போதே விஜயகாந்த் இதைச் சொல்லியிருந்தால் அவர் யோக்கியர். என்னைப் பொறுத்தவரை அவர் ஓர் அரசியல் வியாபாரி; சந்தர்ப்பவாதி. எலும்புத் துண்டுக்காக ஓடுவதுபோல அங்கும் இங்கும் அலைபாய்ந்தவர், சீட்டும் நோட்டும் கிடைக்கவில்லை என்பதற்காக பாஜக அணியில் சேர்ந்துள்ளார். தனது மைத்துனரை மந்திரியாக்க மோடியை ஆதரிக்கிறார். 

இவ்வாறு சீமான் கூறியிருந்தார். இது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media