தமிழகத்தில் வரும் 24-ம் தேதி அன்று தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்காக கூடுதலாக ஒரு நாள் மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு தேர்தல் துறையினர் கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சி.சவுண்டையா வெள்ளிக்கிழமை ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் தேர்தலை அமைதியாகவும், நியாயமான முறையிலும் நடத்துவதற்காக டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 22-ம் தேதி காலை 10 மணியிலிருந்து வாக்குப்பதிவு நடக்கும் நாளான 24-ம் தேதி நள்ளிரவு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களும் மூடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 16-ம் தேதியும் மதுக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தலை அமைதியாகவும், நியாயமான முறையிலும் நடத்துவதற்காக டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 22-ம் தேதி காலை 10 மணியிலிருந்து வாக்குப்பதிவு நடக்கும் நாளான 24-ம் தேதி நள்ளிரவு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களும் மூடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 16-ம் தேதியும் மதுக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.