BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 21 April 2014

வயதை மறைத்த பேஸ்புக் காதலியை சுட்டு கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் மரணம்


உ.பி. முஸாபர்நகரின் பச்சண்டாகலா கிராமத்தை சேர்ந்த வினித்குமார்(24) கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மத்தியப் பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த ஜோதி கோரி பேஸ்புக் மூலம் அறிமுகமானார்.

சுமார் 2 வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் உருவான நட்பு காதலாக மாறியது. ஜோதியை நேரில் சந்திக்க விரும்பிய வினித், கடந்த புதன்கிழமை ஜபல்பூர் சென்றுள்ளார்.வெள்ளிக்கிழமை காலை ஜபல்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜோதிக்கு போனில் பேசியுள்ளார். ஜோதி கூறியபடி இருவரும் பேடாகாட்டின் மலை உச்சியில் சந்தித்துள்ளனர். அப்போது, நீண்ட நேர பேச்சுக்கு பின் தன்னுடன் கொண்டு வந்திருந்த கள்ளத்துப்பாக்கியால், கோரியை சுட்டிருக்கிறார் வினித். உடனடியாக கோரியின் உயிர் பிரிந்துள்ளது. பிறகு, ஒரே ஒரு குண்டை மட்டும் ‘லோடு’ செய்யும் கள்ளத்துப்பாக்கியில் மற்றொரு குண்டைப் போட்டு தனது நெஞ்சில் சுட்டுக் கொண்டார் வினித்.
இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியுற்ற இரண்டு தரப்பு வீட்டாரும் நம்புவதற்கு நீண்ட நேரம் பிடித்துள்ளது.ஜோதிக்கு 22 வயதில் பொறியியல் பயிலும் மகளும் மற்றும் 19 வயது ப்ளஸ் 2 பயிலும் மகளும், 18 வயதில் 10-ம் வகுப்பு பயிலும் மகனும் உள்ளனர். கணவர் ம.பி அரசு நீர்வளத்துறையில் அலுவலராகப் பணியாற்றுகிறார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media