BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 21 April 2014

மோடி பற்றி 'நோ கமென்ட்ஸ்'- 2002 கலவரத்தில் சிக்கி, உயிர் பிழைத்த குதுபுதீன்

2002ல் நடந்த குஜராத் கலவரத்தின் போது, ஆங்காங்கே தீவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளில் ஒன்று குதுபுதீன் அன்சார் என்பவருடையது.  உடலில் காயங்களுடனும், சட்டையில் ரத்தக் கறைகளுடனும், இரு கைகளையும் கூப்பியவாறு அவர் உயிர்ப் பிச்சை கேட்கும் படம்தான் குஜராத் கலவரத்தின் கொடூர முகத்தை உலகிற்கு உணர்த்தியது. கலவரத்தின் போது, ராணுவ உதவியால் உயிர் தப்பிய குதுபுதீன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:

உங்களுக்குத் தெரியும், குஜராத் கலவரத்தின் போது என்ன நடந்தது என்று. நாட்டுக்கே தெரியும், அப்போது என்ன நடந்தது என்று. நான் மீண்டும் அதைச் சொல்ல விரும்பவில்லை.

நாங்கள் இப்போது முன்பைவிட மேம்பட்டிருக்கிறோம் என்றால், முன்பைவிடக் கடுமையாக உழைக்கிறோம் என்பதுதான் அதன் அர்த்தம். எங்கள் வாழ்க்கைக்காக, குழந்தைகளுக்காக, எதிர்காலத்துக்காக மிகக் கடுமையாக உழைக்கிறோம். அது ஒன்றுதான் காரணம். இத்தனை தலைமுறைகளாக இதே இந்து சகோதரர்கள் மத்தியில்தான் நாங்கள் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இனியும் அவர்களுடன் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை.

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. எனக்குத் தெரிந்து இங்கு முஸ்லிம்களில் ரியல் எஸ்டேட் காரர்களைப் போன்ற பெருவியாபாரிகள், தரகர்கள் சிலர் தங்கள் பிழைப்புக்காக அவரை ஆதரிப்பது உண்டு. மற்ற வர்கள் யாருடைய நம்பிக்கையையும் அவர் பெறவில்லை.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media