BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 21 April 2014

கிரிராஜ் சிங் தன் கருத்தை மறுபரிசீலனை செய்ய மறுத்தார் !!

கிரிராஜ் சிங் முன்பு அளித்த பேட்டியில் , மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்று கூறி இருந்தார் . பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்த நிலையிலும் அவர் தன் கருத்தை மாற்றி கொள்வதாக இல்லை .

ஆனால் பாஜக கட்சியோ உடனடியாக செயல்பட்டு அவரை கட்சியில் இருந்து தனிமைப்படுத்தும் வகையில் கட்சியின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்  கட்சிக்கும் கிரிராஜ் சிங்கின் கருத்துக்கும் சம்பந்தமில்லை .மோடி ஒரு ஆக்கப்பூர்வமான பரப்புரை செய்து வருகிறார் . நாங்கள் இதுபோன்ற கருத்துக்களை பரப்புவதில்லை என்றார் .

பாஜக ஆட்சியை பிடிப்பதில் தீவிரமாக பரப்புரை செய்து வரும் நிலையில் இதுபோன்ற கருத்துக்கள் அவர்களுக்கு சொந்ந செலவில் சூனியம் வைத்து கொள்வதற்கு சமம் .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media